செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

நற்றிணை – அரிய செய்தி - 1

நற்றிணை  அரிய செய்தி – உரையாசிரியர்கள் :-
 உரை வேந்தர் ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை
 முனைவர் கு.வெ. பாலசுப்பிரமணியன்
நற்றிணை – அரிய செய்தி - 1
                                            பாண்டில் ஆடல்
பொரியரை வேம்பின் புள்ளி நீழல்
கட்டளை அன்ன வட்டரங் கிழைத்துக்
கல்லாச் சிறாஅர் நெல்லிவட் டாடும்
                                        இளங்கீரனார், நற். 3 : 2-4
வேம்பினது புள்ளி போன்ற நிழலின்கண்ணே கட்டளைக் கல் போன்ற அரங்கை வட்டினாலே கீறி ஏனைத் தொழிலொன்றும் கற்றறியாத சிறுவர்கள் பாண்டிலாடா நிற்கும்.
கட்டளைக் கல் – பொன்னை உரைத்து மாற்றுப் பார்க்கும் கல்.
பாலை- இண்டங்கொடியுடனே ஒருசேரப்படர்கின்ற ஈங்கையையுடையவாகும்ஈந்தின்ஈத்தமரங்கள்-2


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக