ஞாயிறு, 22 நவம்பர், 2015

பரிபாடல் – அரிய செய்தி - 1

பரிபாடல் – அரிய செய்திகள்
உரையாசிரியர் : பெருமழைப் புலவர்
திரு பொ. வே. சோமசுந்தரனார்
”ஓங்கு பரிபாடல்” – இது தமிழ் மொழிக்கே சிறப்புரிமையாகப் பெற்ற அகப் பொருள் – புறப் பொருள் ஆகிய இருபொருள்களையும் தழுவிப் புலமைச் சான்றோரால் ஆக்கப்பட்ட செவ்விய நூலாகும். இந்நூல் முழுமுதற் கடவுளராகிய திருமாலையும் செவ்வேளாகிய முருகப்பெருமானையும் உலகு புரந்தூட்டும் உயரிய ஒழுகலாற்றைக் கொண்ட வையைப் பேரியாற்றையும் வாழ்த்துதலாக உட்பொருள் கொண்டு – இடையிடையே நம் தமிழகப் பண்பு அன்பு காதல் வீரம் அறம் காவிய ஓவியத் திறங்களை விளக்கிச் செல்லும் பெருமை மிக்கது. அந் நூற்பாடல்களுள் நம் தமிழ் மாநிலத்துச் சிதைந்தன போக எஞ்சிய ( 22 ) பாடல்களே இன்றுகாறும் நம்மிடையே நின்று நிலவுகின்றன.
பரிபாடல் – அரிய செய்தி     - 1
திருமால் மகன்கள்
பொருவேம் என்றவர் மதங்கபக் கடந்து
செருமேம் பட்ட செயிர்தீர் அண்ணல்
இருவர் தாதை இலங்குபூண் மாஅல்
………………………………… 1:  26 -28
 அண்ணலே ! நின்னொடு பகைத் தெழுந்தவருடைய வலி கெட வென்று போரிடத்தே மேம்பாடுடைய தலைவனாக விளங்கி நின்றனை ; நீ காமனும் சாமனுமாகிய இருவருக்கும் தந்தை யாவாய்………


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக