புதன், 25 நவம்பர், 2015

பரிபாடல் – அரிய செய்தி - 4

பரிபாடல் – அரிய செய்தி - 4
எண்ணியல் …?
பாழ் எனக் கால் எனப் பாகு என ஒன்று என
இரண்டு என மூன்று என நான்கு என ஐந்து என
ஆறு என ஏழு என எட்டு எனத் தொண்டு என
 நால்வகை ஊழிஎன் நவிற்றும் சிறப்பினை
கடுவன் இளவெயினனார். பரிபா. 3 : 77 – 80

பாழ் - புருட தத்துவமும் ; கால்-  வானம் முதலிய ஐம்பெரு பூதங்களும் ; பாகு - வாக்கு முதலிய தொழில் கருவிகள் ஐந்தும்; ஒன்று - ஓசையும் ; இரண்டு - ஊறும் ; மூன்று - ஒளியும் ; நான்கு -  சுவையும் ; ஐந்து – நாற்றமும் ஆகிய ஐந்து புலன்களும்; ஆறு -  மெய் வாய் கண் மூக்கு செவி மனம் என்னும் அறிகருவிகள் ஆறும் ; ஏழு -  அகங்காரமும் எட்டு   புத்தியும்;  தொண்டு - மூலப் பகுதியும்;  ஆகிய இவ்வெண்களானே நால்வகை ஊழியின்கண்ணும் ஆராய்ந்து கூறப்படும் பெருமையினை உடையோய் !
ஒன்று – முதற் பூதம் வானம் – சிறப்புப் பண்பு – ஓசை
இரண்டாம் பூதம் – காற்று -             ”                  --  ஊறு
மூன்றாம் பூதம் – தீ                          ”        -  ஒளி
நான்காம் பூதம் – நீர்                        ”        - சுவை
ஐந்தாம் பூதம் -  நிலம்                      ”        - நாற்றம்
ஆறாம் பூதம் -  (ஐந்தொடு)மனம்              -ஞானேந்திரியம் 
ஏழு -  அகங்காரம்
எட்டு – புத்தி
ஒன்பது – மூலப்பகுதி
நால்வகை ஊழி – கிருத யுகம் ; திரேத யுகம் ; துவாபர யுகம் ; கலி யுகம்.
( பாழென… காலென… பாகென… என  இவற்றை இறைத் தத்துவங்களாக ஏற்றிக் கூறினும் தமிழர்தம்  எண்ணியல் தொடர்பான .. பாழ் – சுழி ; கால் : கால் பகுதி ;  பாகு (பகு) அரைப் பகுதி என எண்ணியல் அறிவியலுக்கு ஏற்றம் தருவதாகக் கொள்ளலாமா ? ஆய்க.) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக