திங்கள், 16 நவம்பர், 2015

பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 31 - 32

பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 31 - 32
நீர் வார்த்துக் கொடுத்தல்
உரைசால்  வேள்வி முடித்த கேள்வி
அந்தணர் அருங் கலம் ஏற்ப நீர் பட்டு
இருஞ் சேறு ஆடிய மணல் மலி முற்றத்து
கபிலர். பதிற். 64  : 4 - 6
வேதத்தை ஓதி வேள்வி முத்த அந்தணர் – அரசனால் அளிக்கப்படும் பெறுதற்கரிய அணிகலன்களை ஏற்பர்.சேரன் அந்தணர்களுக்கு பொருள்கள்( தானம்) வழங்கும்போது நீர் வார்த்துக் கொடுப்பதால்  மணல் மலிந்த முற்றம்  பெரிய சேறாகிய இடமாயிற்று.
பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 32
பாலைப் பண்
தீம் தொடை நரம்பின் பாலை வல்லோன்
பையுள் உறுப்பின் பண்ணுப் பெயர்ந்தாங்கு
சேறு செய் மாரியின் அளிக்கும் நின்
சாறு படு திருவின் நனை மகிழானே
கபிலர். பதிற். 65  : 14 - 17

இனிய நரம்புகளை உடைய பாலை யாழை இசைப்பதில் வல்லோன் பண்கள் எல்லாவற்றுள்ளும் துன்பத்தைச் செய்யும் உறுப்பையுடைய பாலைப் பண்களை மாறி மாறி வாசித்தாற் போலச் சேற்றைச் செய்கின்ற மழையைப் போல அளிக்கும் விழாவின் – செல்வத்தைப் போன்ற மதுவால் மகிழ்ச்சியயுடைய ஓலக்க இருப்பின் கண்ணே. ( வெவ்வேறு சுவை உடைய மதுவிற்கு எல்லாப் பண்களிலும் உள்ள வருத்தத்தைச் செய்யும் சுவையுடைய வெவ்வேறு பாலைப் பண்கள் உவமை. நனை – கள் . மதுவிற்கெல்லாம் பொதுப் பெயர்.) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக