சனி, 21 நவம்பர், 2015

பதிற்றுப்பத்து –அரிய செய்திகள் முற்றின. பரிபாடல் – அரிய செய்திகள் … தொடரும்….

பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 41
ஏராளர் பெறும் திருமணிகள்
பல் விதை உழவின் சில் ஏராளர்
……………………………………..
இலங்கு கதிர்த் திருமணி பெறூஉம்
 அரிசில் கிழார் . பதிற். 76  :  11  - 14
உழவர்களுக்கு  வயல்களில் அழகிய மணிகள் கிடைக்கின்றன. மழை பெய்தலானே ஏராளர் உழுது விளைத்துக் கோடலேயன்றி உழுத இடங்கள் தோறும் ஒளியையுடைய திருமணிகளை எடுத்துக் கொள்ளும் இடத்தை உடைய ஊர்கள்.சேர நாட்டு மண் வளம் குறித்து ஆய்க.
பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 42

இரும்பொறை  இருக்கை
வெல் போர் வேந்தர் முரசு கண் போழ்ந்து அவர்
அரசு உவா அழைப்பக் கோடு அறுத்து இயற்றிய
அணங்குடை மரபின் கட்டில் மேல் இருந்து
அரிசில் கிழார் . பதிற். 79  :  12  - 14

வெல்லும் போரைச் செய்கின்ற அரசருடைய முரசின் கண்ணைக் கிழித்து – அவருடைய பட்டத்து யானை வருத்தத்தாற் கதறும்படி அதனுடைய கொம்பை வெட்டி – தெய்வத் தன்மையுடைய கட்டில் செய்து இருந்தனை…
பதிகம்
அருந் திரள் ஒள் இசைப் பெருஞ் சேரல் இரும் பொறையை
மறு இல் வாய்மொழி அரிசில் கிழார்
பாடினார் பத்துப் பாட்டு.
செல்வக் கடுங்கோ வாழியாதனுக்கு வேளாவிக் கோமான் பதுமன் என்பானின் மகள் பெற்ற மகன் பெருஞ் சேரல் இரும்பொறை.
தகடூர்  எறிந்த பெருஞ் சேரல் இரும்பொறை பதினேழு ஆண்டுகள் அரசு வீற்றிருந்தான். 22/11/15
பதிற்றுப்பத்து –அரிய செய்திகள் முற்றின.

பரிபாடல் – அரிய செய்திகள் … தொடரும்….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக