ஞாயிறு, 29 நவம்பர், 2015

பரிபாடல் – அரிய செய்தி – 9 - 10

பரிபாடல் – அரிய செய்தி – 9 - 10
நீர் மாசுபடல்
மாறு மென் மலரும் தாரும் கோதையும்
வேறும் தூரும் காயும் கிழங்கும்
பூரிய மாக்கள் உண்பது மண்டி
நார் அரி நறவம் உகுப்ப நலன் அழிந்து
வேறாகின்று இவ்விரி புனல் வரவு
நல்லந்துவனார். பரிபா. 6 : 46  – 50

மக்கள் சூடிக் கழித்த மலர்கள் மணம் நிறம் மாறுபட்டு மெல்லிய சருகுகளாயின; அவற்றையு ஆடவர் – மகளிர் அணிந்த மாலைகளையும் ; ஆற்றின் கரையிலுள்ள மரம் செடி கொடிகளினுடைய வேர்கள் தூர்கள் காய்கள் கிழங்குகள் ஆகியவற்றையும் கீழ்மக்கள்  பன்னாடையில் வடித்த கள்ளினைச் சிந்தியதால்  வையையின் நீர்  தூய்மை இழந்து மாறுபட்டு விட்டது. ( நீரின்றமையாது உலகு – வள்ளுவர் வாக்கையும் எண்ணுக; நீர் வளமன்றோ நாட்டின் வளம்-  (தமிழ்) உணராதார் உலகாள வந்தாரே! ) 30
பரிபாடல் – அரிய செய்தி - 10
தமிழ் மதுரை
தமிழ் வையைத் தண்ணம் புனல்
நல்லந்துவனார். பரிபா. 6 : 60 
 தமிழை உடைய வையை ஆற்றில் வந்த குளிர்ந்த புதுப் புனல்
( தமிழ் கெழு கூடல் – புறநா. 58 ; தமிழ் நிலைபெற்ற தாங்கரு மரபின் மதுரை – சிறுபாண்.) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக