சனி, 20 பிப்ரவரி, 2016

பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 13

பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 13
யாளி – யானை
மழைவிளை யாடும் கழைவளர் அடுக்கத்து
அணங்குடை யாளி தாக்கலின் பலவுடன்
கணம்சால் வேழம் கதழ்வுற் றாங்கு
     கடியலூர் உருத்திரங்கண்ணனார், பெரும்பா. 4 : 257 – 259
மழை மேகங்கள் விளையாடும் மூங்கில் மரங்கள் செறிந்துள்ள மலையில், யாளியால் தாக்குண்ட யானைக் கூட்டங்கள் கலங்கிக்  கதறுவதைப் போன்று, …. கருப்பஞ் சாற்றைப்பிழியும் ஆலைகளில் ஆரவாரம்.
( கழை – மூங்கில் ; அடுக்கம் – மலைப்பக்கம் ; யாளி – ஒரு கொடிய விலங்கு ; வேழம் – யானை ; கதழ்வுற்று – கலங்கி ; சிலைக்கும் – ஒலிக்கும். யாளி – இவ்விலங்கினம் குறித்து மேலும் ஆய்க.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக