வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 19

பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 19
கலங்கரை விளக்கம்
வானம் ஊன்றிய மதலை போல
ஏணி சாத்திய ஏற்று அருஞ் சென்னி
விண்பொர நிவந்த வேயா மாடத்து
இஅவில் மாட்டிய இலங்குசுடர் ஞெகிழி
உரவுநீர் அழுவத்து ஓடு கலம் கரையும்
 துறை பிறக்கு ஒழியப் போகி..
   கடியலூர் உருத்திரங்கண்ணனார், பெரும்பா. 4 :  346 -351
வானம் விழாதபடி முட்டுக்காலாக ஊன்றிவைத்த ஒரு அற்றுக்கோல் போல விண்ணைத் தீண்டும்படி உயர்ந்து, ஏணி சாத்தியும் ஏறுதற்கு அரிய தன்மையினையுடையதாய், வேயாது, சாந்து பூசப்பட்ட மாடத்திடத்தே, இரவு நேரத்தில் கொளுத்திய விளக்குச் சுடர் , திசைத் தப்பிப் பெருங்கடற்பரப்பில் ஓடும் மரக்கலங்களை அழைக்கும் நீப்பாயல் (மாமல்லபுரம்) துறைமுகம்..
( கறயானால் அரிக்கப்பட்ட ஆலமரத்தை அதன் மதலை (விழுதுகள்) தாங்கி நிற்பது போலக் கலங்கரை விளக்கம் வானம் ஊன்றிய மதலை போல விளங்குகிறது. மதலை – முட்டுக்கால் ; மாட்டிய – கொளுத்திய ; வேயா மாடம் – கூரை வேயாது சாந்து பூசப்பட்ட ;  இலங்கு -  விளங்கித் தோன்றுகின்ற ; உரவுநீர் அழுவம் -  பெரு நீர்ப்பரப்பு, கடல்.) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக