புதன், 10 பிப்ரவரி, 2016

பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 3

பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 3
இளந்திரையன்
இருநிலம் கடந்த திருமறு மார்பின்
முந்நீர் வண்ணன் பிறங்கடை அந்நீர்த்
திரைதரு மரபின் இரவோன் உம்பல்
மலர்தலை உலகத்து மன்உயிர் காக்கும்
முரசு முழங்கு தானை மூவருள்ளும்
இலங்குநீர்ப் பரப்பின் வளைமீக் கூறும்
வலம்புரி அன்ன வசைநீங்கு சிறப்பின்
அல்லது கடிந்த அறம்புரி செங்கோல்
பல்வேல் திரையற் படர்குவிர் ஆயின்
கேள் அவன் நிலையே கெடுகநின் அவலம்
  கடியலூர் உருத்திரங்கண்ணனார், பெரும்பா.4 :29 - 38
பெரிய நிலத்தை அளந்து கொண்டவனும், திருமாலாகிய மறுவினை அணிந்த மார்பை உடையவனும், கடல் வண்ணனுமாகிய திருமால் மரபினன் அவ்வள்ளல் ; கடல் அலைகளால் கரை சேர்க்கப்பட்ட  சோழ மன்னன் மரபில் வந்தவன்.ல்; கடலிலே பிறந்த சங்குகளிலே வலம்புரிச் சங்கையே உலகம் புகழ்தல்போல, பெரிய உலகத்தே நிலைபெற்று வாழும் உயிர்களைப் புரக்கும் சேர, சோழ, பாண்டிய மன்னர்களைவிட மிகுதியாகப் புகழப்பட்டவன் ; மறத்தைப் போக்கி அறத்தை நிலைநிறுத்திய செங்கோலையும் பல வேற்படைகளையும் கொண்டவனாக விளங்கும்  தொண்டைமான் திரையன்பாற் சேர நீவிர் எண்ணுவிராயின் அவ்வள்ளலின் தன்மையை யான் கூறக் கேட்பாயாக… கேட்ட மாத்திரத்தில் நின் அவலம் கெட்டொழியும்.  தொடரும் …….. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக