செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 2

பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 2
பாணன் – வறுமை
தண்கடல் வரைப்பில் தாங்குநர்ப் பெறாது
பொழிமழை துறந்த புகைவேய் குன்றத்துப்
பழுமரம் தேரும் பறவை போல
கல்லென் சுற்றமொடு கால்கிளர்ந்து திரிதரும்
புல்லென் யாக்கைப் புலவுவாய்ப் பாண.
                         கடியலூர் உருத்திரங்கண்ணனார், பெரும்பா.4 :17 - 21

ஞாயிறும் திங்களும் வலம் வருகின்ற கடல் சூழ் உலகில், மழை வறந்தமையால் புகை எழுகின்ற மலையின்கண், நின்னைப் புரப்பாரைப் பெறாமையால், பழம் கனிந்த மரத்தை நாடித் திரியும் பறவைபோல, அழுது புலம்பும் சுற்றத்தினருடன் ஓரிடத்து இராமல் பயனின்றி ஓடித் திரிகின்ற பொலிவிழந்த வடிவினையும் கற்ற கல்வியை வெறுத்துப் பேசுகின்ற வாயையும் உடைய பாணனே..! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக