சனி, 27 பிப்ரவரி, 2016

பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 20

பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 20
நில்லா உலகத்து….
நாவலம் தண்பொழில் வீவுஇன்று விளங்க
நில்லா உலகத்து நிலைமை தூக்கி
அந்நிலை அணுகல் வேண்டி ……..
  கடியலூர் உருத்திரங்கண்ணனார், பெரும்பா. 4 :  465 -467
நாவலாற் பெயர் பெற்ற அழகு நிறைந்த குளிர்ந்த இவ்வுலகமெல்லாம் கேடின்றி விளங்கும்படி, இவ்வுலகத்தே நிலைத்து நிற்கும் பேறு உடையது புகழ் ஒன்றே என்பதனை ஆராய்ந்து அறிந்து , நீ நிற்கின்ற சேய்த்தாய நிலையினின்றும் தன்னை அணுகுதற்கு விரும்பியழைத்து….
காண்க: ‘ ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ் அல்லால்
                பொன்றாது நிற்பதுஒன்று இல். (குறள்.233)
ஆடை : ‘ ஆவியன்ன அவிர்நூற் கலிங்கம்’ என நுட்பமாக நெய்யப்பட்ட ஆடையைக் குறித்தார் புலவர். ‘ புகைவிரிந்தன்ன பொங்கு துகில்’ (சீவக.67) – ’ஆவியன்ன பூந்துகில்’ (சீவக. 1094) – ‘ ஆவிநுண் துகில் அணிகலம்’ – (பெருங். 40: 228) என்றும் பிற நூல்களில் வருதலையும் காண்க. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக