ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016

பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 14

பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 14
குளம் – காவல்
 கோடை நீடினும் குறைபடல் அறியாத்
தோள்தாழ் குளத்த கோடு காத்திருக்கும்
     கடியலூர் உருத்திரங்கண்ணனார், பெரும்பா. 4 :  271 – 272
 நெய்தல் நில மக்களால் உண்ணீர் பெறற்பொருட்டுத் தோண்டிப் பேணப்பட்டு வரும் குளம் .
 கோடைக் காலம் நீண்டதாயினும், வற்றாத நீர் நிலை – கூம்பிய  கைகள் அமிழாமல் நின்ற ( கைகளை மேலே கூப்பி மூழ்குங்கால்) நீரினையுடைய குளக்கரைகளைக் காவல் காத்திருப்பர். ( கோடு – குளக்கரை ) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக