ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

சிறுபாணாற்றுப்படை – அரிய செய்தி – 17

சிறுபாணாற்றுப்படை – அரிய செய்தி – 17
துணிமழை தவழும் துயல்கழை நெடுங்கோட்டு
எறிந்துரும் இறந்த ஏற்றருஞ் சென்னிக்
குறிஞ்சிக் கோமான் கொய்தளிர்க் கண்ணி
செல்லிசை நிலைஇய பண்பின்
நல்லியக்கோடனை நயந்தனீர் செலினே.
  இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார். சிறுபாண். 3 : 266  – 270
 கருமேகங்கள் வெண்மேகமாகிய மஞ்சின் இடையே தவழ்கின்ற மலை; அம்மலையில் நீண்ட மூங்கில் மரங்கள் நிறைந்து விளங்குவதால் இடியேறுகூட தான் அப்பால் செல்லத் தடையாதல் கருதி இடித்துச் செல்லும். யாராலும் எளிதில் ஏறுதற்கு அரிதான முடியுடைய மலை.- இத்தகைய மலைநாட்டுக்குத் தலைவன் அவன் ; கொய்த இளந்தளிர் மாலை அணிந்தவன் ; புகழ் நிலைத்து நிற்றற்கு உரிய வண்மை முதலிய குணங்களால் நிறைந்தவன் ; இத்தகைய வள்ளல் ஆகிய நல்லியக்கோடனை விரும்பி நீவிர் செல்குவீராயின்  வேண்டிய வளம் பெறலாம்.
முற்றும்
4 . பெரும்பாணாற்றுப்படை – தொடரும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக