புதன், 24 பிப்ரவரி, 2016

பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 17

பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 17
 நீர்ப்பெயற்று - கடல் வாணிகம்
நீர்ப்பெயற்று என்பது ‘நீர்ப்பாயல் துறை’ என்பதன் மரூஉ – மாமல்லபுரம் துறைமுகப்பட்டினம்.
…. … ……     …..               ……பாற்கேழ்
வால்வுளைப் புரவியொடு வடவளம் தரூஉம்
நாவாய் சூழ்ந்த நளிநீர்ப் படப்பை
 மாடம் ஓங்கிய மணல்மலி மறுகின்
பரதர் மலிந்த பல்வேறு தெருவின்
சிலதர் காக்கும் சேணுயர் வரைப்பின்
 பால் போன்ற நிறத்தினையும், வெள்ளிய தலையாட்டத்தையும் உடைய குதிரைகளோடு வடநாட்டின்கண் உள்ள நுகர் பொருள்களையும் கொணர்ந்து தருகின்ற மரக்கலங்கள் சூழ்ந்து கிடக்கும் பெருமையையுடைய கடற்கரை ; மாடங்கள் உயர்ந்து நிற்கின்ற மணல்மிக்க தெருக்கள் ; பரதர் வாழும் பற்பல தெருக்கள் ; தொழில் செய்வோரால் காக்கப்படும் மிக உயர்ந்த பண்டகசாலைகள் – உடையது.
( புரவி – குதிரை ;  வடவளம் – வடநாட்டு விளைபொருள் ;  சிலதர் – தொழில் செய்வோர் ; பரதர் – வணிகர் ; நாவாய் – மரக்கலம் .) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக