சனி, 13 பிப்ரவரி, 2016

பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 6 புல்லரிசி எடுத்தல்

பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 6
புல்லரிசி எடுத்தல்
மான் தோல் பள்ளி மகவொடு முடங்கி
ஈன்பிணவு ஒழியப் போகி நோன்காழ்
இரும்புதலை யாத்த திருந்துகணை விழுக்கோல்
உளிவாய்ச்  சுரையின் மிளிர மிண்டி
இருநில்க் கரம்பைப் படுநீறு ஆடி
நுண்புல் அடக்கிய வெண்பல் எயிற்றியர்
கடியலூர் உருத்திரங்கண்ணனார், பெரும்பா. 4 : 89  - 94
மான் தோல் படுக்கையில் ஈன்ற குழந்தையுடன் முடங்கிக் கிடக்கிறாள் எயிற்றி ; அவளை விடுத்துப் பிற வெண்ணிறப் பற்கள் கொண்ட – எயிற்றியர் பூண் கட்டிய சீரிய கோலின் செருகப்பட்ட உளிபோலும் வாயையுடைய பாரைகளால் கரிய காம்பு நிலத்தைக் குத்திக் கிளறி, புழுதியை அளைத்து நுண்ணிய புல்லரிசியை வாரிக் கொண்டு வருகின்றனர்.
( மான் தோல் படுக்கை -  மகவு ஈன்றவள் ;  விழுக்கோல் – வயிரம் பாய்ந்த மரத்தால் – ஆச்சி, கருங்காலி முதலான மரத்தால் செய்யப்பட்ட கோல் ; ஒருபக்கம் உளிபோல் – ஒருபக்கம் இரும்புப் பூண் கொண்டது ; எறும்புப் புற்றைப் பாரையாற் குத்திக் கிளறி ஆண்டு எறும்பு ச்ந்ந்ர்த்து வைத்த புல்லரிசியை வாரிக்கொண்டு வந்து உண்ணல் எயிற்றியர் வழக்கம். )  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக