புதன், 31 மே, 2017

திருக்குறள் – சிறப்புரை :555

திருக்குறள் – சிறப்புரை :555
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை. ~~~ ௫௫௫
கொடுங்கோல் மன்னனின் ஆட்சியில் மக்கள் அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரே - கொடுங்கோலன் செல்வ வளத்தை அழிக்கும் படையாகும்.
“கேளிர்கள் நெஞ்சு அழுங்கக் கெழுவுற்ற செல்வங்கள்
தாள் இலான் குடியேபோல் தமியவே தேயுமால்.” ~~ கலித்தொகை.

சுற்றத்தினர் மனம் வருந்தும்படியாகத் தேடிக் குவித்த செல்வங்கள்… பேணும் முயற்சி இல்லாத மன்னவனின் குடிகள் போலத் தாமாகவே தேய்ந்து அழியும்..

1 கருத்து: