திங்கள், 6 நவம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 698

திருக்குறள் – சிறப்புரை : 698
இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற
ஒளியோடு ஒழுகப் படும்.---- ௬௯௮
அரசர் எமக்கு இளையவர்; எமக்கு இன்ன முறையில் உறவு உடைவர் என்று அரசரை இகழ்ந்து கூறாது தமது அரசபதவிக்கு உரிய தகுதியுடன் நடந்துகொள்ள வேண்டும்.
உயர்ந்தோர் உறவுடையராயின் அவருக்குக்கீழ் பணியாற்றும் பொழுது உறவு முறையை வெளிக்காட்டாது இருத்தல் நன்று.
“ஒன்றாய்விடினும் உயர்ந்தார்ப் படும் குற்றம்
குன்றின் மேல் இட்ட விளக்கு.” –பழமொழி.

உயர்ந்தோர் ஒரே ஒரு குற்றம் புரியினும் அது குன்றின் மேல் இட்ட விளக்கு போல் பல்லோர் பார்வையில் படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக