புதன், 29 நவம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 721

திருக்குறள் – சிறப்புரை : 721
வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர். --- ௭௨௧
சொற்களின் தொகைவகை அறிந்த சான்றோர்,  அவையில் குழுமியிருக்கும் அறிவிற்சிறந்தோர் தன்மை அறிந்து, வாய் சோர்ந்தும் குற்றம் நேராமல் பேசுதல் வேண்டும்.
“ அருளின் அறம் உரைக்கும் அன்புடையார் வாய்ச்சொல்
பொருள் ஆகக் கொள்வர் புலவர். – நாலடியார்.

அருள் காரணமாக அறம் வலியுறுத்தும் அன்புடைய பெரியோரது வாய்மொழியை அறிவுடையோர் பெரும் பயனுடையதாக மதித்து ஏற்றுக்கொள்வர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக