வெள்ளி, 10 நவம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 702

திருக்குறள் – சிறப்புரை : 702
ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோடு ஒப்பக் கொளல். --- ௭0௨
ஒருவன் முகம் நோக்கி அவன் அகத்தின்கண் நிகழ்வனவற்றை ஐயத்திற்கு இடனின்றி உணர்ந்து கொள்ளும் ஆற்றல் உடையவனைத் தெய்வத்திற்கு ஒப்பானவனாகக் கொள்ள வேண்டும்.
“ இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
  துன்பம் உறாஅ வரின்.---குறள்.1052.

இரந்த பொருள் ஈவாரது பண்பால் வாய் திறந்து கேட்கும் முன்பே மகிழ்ச்சியோடு கிடைக்குமாயின் ஒருவனுக்கு இரத்தலும் இன்பம் தருவதாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக