சனி, 25 நவம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 717

திருக்குறள் – சிறப்புரை : 717
கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
சொல்தெரிதல் வல்லா ரகத்து. ௭௧௭
குற்றமற்ற பொருள்பொதிந்த சொற்களை ஆராய்ந்து அறியும் சான்றோர் அவைக்கண் ஒருவன் உரைப்பானாயின் பல நூல்களையும் கற்றுத்தேர்ந்த கல்வியின் சிறப்பு யாவர்க்கும் விளங்கித் தோன்றும்.
“ கல்வி அகலமும் கட்டுரை வாய்பாடும்
கொல்சின வேந்தன் அவை காட்டும் ….” –பழமொழி.

பகைவரைக் கொன்றொழிக்கும் ஆற்றல்வாய்ந்த அரசனது கல்வியின் பெருமையையும் சொல்வன்மையையும் அவன் வீற்றிருக்கும் அவையே காட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக