செவ்வாய், 7 நவம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 699

திருக்குறள் – சிறப்புரை : 699
கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர். ---- ௬௯௯
அரசனால் விரும்பி ஏற்றுக்கொள்ளப்பட்டோம் என்று நினைத்துகொண்டு அரசான் விரும்பாதவற்றைச் செய்யத் துணியமாட்டார்கள் தெளிந்த அறிவுடைய சான்றோர்கள்.
“மன்பதை காப்ப அறிவு வலியுறுத்தும்
நன்று அறி உள்ளத்துச் சான்றோர்…” –பதிற்றுப்பத்து.

மக்களினத்தைக் காப்பதற்குரிய அறிவுரைகளைக் கூறும் அறம் நிறைந்த உள்ளத்தை உடைய சான்றோர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக