திங்கள், 20 நவம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 712

திருக்குறள் – சிறப்புரை : 712
இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
நடைதெரிந்த நன்மை யவர். ---- ௭௧௨

   சொல்நடை (சொற்பொருள்- சொல்லின் நேர்பொருள், சூழல் பொருள்,அகராதிப் பொருள்) அறிந்த சான்றோர் அவையின் சூழலுக்கேற்ப, நற்பயன் நல்கும் சொற்களைத் தெளிந்து சொல்லுதல் வேண்டும்.
“ திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
 பொருளும் அதனினூஉங்கு இல்.—குறள். 644.

சொல்லின் திறன் அறிந்து சொல்லைச் சொல்ல வேண்டும் ; அச்சொல்லைவிடச் சிறந்த அறனும் பொருளும் வேறில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக