சனி, 18 நவம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 710

திருக்குறள் – சிறப்புரை : 710
நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்
கண்ணல்லது இல்லை பிற. --- ௭௧0
நுண்ணிய அறிவுடையோம் என்பார் உண்மையில் கூர்ந்து நோக்கிப் பிறர் உள்ளக்குறிப்பை அளங்கும் கோல் என்பது அவர்தம் கண்ணேயன்றிப் பிறிதொன்றும் இல்லை.
“ கடைக்கண்ணால் கொல்வான்போல் நோக்கி நகைக் கூட்டம்
செய்தான் அக்கள்வன் மகன்.” –கலித்தொகை.
தோழி..! என்னைக் கடைக்கண்ணால் கொல்பவனைப்போல் நோக்கித் தன் மன மகிழ்ச்சியைக் காதலில் கூட்டிப் புன்னகை புரிந்து சென்றான் அக்கள்வன் மகன்.—தலைவி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக