வியாழன், 23 நவம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 715

திருக்குறள் – சிறப்புரை : 715
நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு.--- ௭௧௫
ஒருவனுக்கு நல்ல குணங்கள் என்று சொல்லப்படுவனவற்றுள் முதலிடம் வகிப்பது, அறிவுடையார் முன்பு அவரினும் முற்பட்டுப் பேசாமல் காக்கும் அடக்கமேயாகும்.
“ காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு.---குறள்.122.

உயிருக்குப் பெருமைதரும் செல்வமாவது அடக்கமாகும் அதனால் அடக்கத்தைப் பெறுதற்கரிய பொருளாகப் போற்றிக் காக்க வேண்டும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக