ஞாயிறு, 26 நவம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 718

திருக்குறள் – சிறப்புரை : 718
உணர்வது உடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொறிந் தற்று. --- ௭௧௮
உரையின் உட்பொருளைத் தாமே உணரவல்ல அறிவுடையார்முன் ஒருவன் பேசுதல் தானே வளர்ந்து செழிக்கவல்ல பயிர் உள்ள பாத்தியின்கண் நீர் பாய்ச்சுதல் போன்றதாம்.
“ ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்
ஓங்கல் வேண்டுவோன் உயர்மொழி தண்டான்.” --முதுமொழிக்காஞ்சி.


இவ்வுலகத்தில் உள்ள மக்கள் எல்லாருள்ளும் உயர்வடைய விரும்புவோன் பிறரிடம் காணப்படும் சிறந்த இயல்புகளையே பேசப் பழகுதல் வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக