வியாழன், 16 நவம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 708

திருக்குறள் – சிறப்புரை : 708
முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி
உற்றது உணர்வார்ப் பெறின்.--- ௭0௮
ஒருவர் மனத்தில் உள்ளதைக் குறிப்பால் உணர்ந்து கொள்ளும் ஆற்றல் உள்ளவர் அவர் முகம் நோக்கிச் சிறிது நேரம் நின்றாலே போதும்.
“ கொலை உண்கண் கூர் எயிற்றுக் கொய் தளிர் மேனி
இனை வனப்பின் மாயோய் நின்னின் சிறந்தார்
நில உலகத்து இன்மை தெளி…” --கலித்தொகை.
கண்டாரை ஈர்க்கும் மையுண்ட கண்ணையும் கூரிய பற்களையும் தளிர்போன்ற மேனியழகையும் உடைய மாயோளே! நின்னைக் காட்டிலும் சிறந்த அழகியர் மண்ணுலகத்து இல்லை என்பது தெளிவாகிறது. –தலைவன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக