செவ்வாய், 28 நவம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 720

திருக்குறள் – சிறப்புரை : 720
அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்
 அல்லார்முன் கோட்டி கொளல். ---- ௭௨0
கற்றறிந்தார், கல்லாதார் கூட்டத்தில் உரையாற்றுவது
தூய்மை இல்லாத முற்றத்தில் அமிழ்தத்தைக் கொட்டுதல் போன்றது.
“ பொருள் உணர்வார் இல்வழி பாட்டு உரைத்தல் இன்னா.”இன்னாநாற்பது.

 பாட்டின் பொருளை அறியும் அறிவுடையார் இல்லாத இடத்தில் செய்யுள் இயற்றிக் கூறுதல் துன்பம் தரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக