வியாழன், 30 நவம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 722

திருக்குறள் – சிறப்புரை : 722
கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார். --- ௭௨௨
கற்றார் அவையில் தேர்ந்த சொல்லெடுத்து செவ்விய நடையில் உரையாற்ற வல்லாரையே,  உலகத்தார் கற்றவர்களுள் சிறந்தவர் இவரெனப் போற்றுவர்.
“ கற்றோர் அறியா அறிவினர் கற்றோர்க்குத்
 தாம் வரம்பு ஆகிய தலைமையர்… “ –திருமுருகற்றுப்படை.

முனிவர்கள், கற்றோரால் சிறிதும் அறியப்படாத பேரறிவினை உடையவர்கள்; கற்றறிந்தவர்களுக்குத் தாமே எல்லையாகிய தலைமைத் தன்மை உடையவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக