புதன், 15 நவம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 707

திருக்குறள் – சிறப்புரை : 707
முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும். --- ௭0௭
ஒருவன் பிறரைக்கண்டு தன் உள்ளத்தால் மகிழ்ந்தாலும் வெறுத்தாலும் அதனை உடனடியாகப் புலப்படுத்துவது அவனது முகமே அதனால் முகத்தைவிட அறிவு மிக்கது என ஒன்று உண்டோ..? (இல்லை என்பதாம்)
“ மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து
 நோக்கக் குழையும் விருந்து. – குறள்..90.

 மென்மையான மலராகிய அனிச்சம் பூ நுகர்ந்தால்தான் வாடும் ஆனால் வீட்டிற்குவந்த விருந்தினரை முகம்கோணிப் பார்த்தாலே வாடிவிடுவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக