ஞாயிறு, 19 நவம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 711

திருக்குறள் – சிறப்புரை : 711
அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்.௭௧௧
சொற்களின் தொகையறிந்த தூய அறிவுடையாராதல் வேண்டின் அவையின்கண் உரையாற்றுங்கால் கேட்போர் திறனறிந்து ஆராய்ந்து தேர்ந்தெடுத்த சொற்களையே சொல்லுதல் வேண்டும்.
“ உயர்ந்தோர் கிளவி வழக்கொடு புணர்தலின்
 வழக்கு வழிப்படுதல் செய்யுட்குக் கடனே. –தொல்காப்பியம்.

உயர்ந்தோர் கூற்று உலக வழக்கொடு பொருந்தி அமைதலால், அதனை வழக்கு வழிப்படுத்தல் செய்யுளுக்கு உரியதோர் முறைமையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக