திங்கள், 13 நவம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 705

திருக்குறள் – சிறப்புரை : 705
குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண். --- ௭0௫
ஒருவன் முகக் குறிப்பினைக்கொண்டு அவன் மனத்தின் எண்ணங்களை அறியமுடியாது போனால் மனிதன் தன் உடல் உறுப்புகளுள் மிகச் சிறந்த உறுப்பாகிய கண்ணைப் பெற்றுள்ளதால் என்ன பயன்..?
தண்ணீர் நில நலத்தால் தக்கோர் குணம் கொடையால்
கண்நீர்மை மாறாக் கருணையால் பெண்நீர்மை
கற்பு அழியா ஆற்றால் கடல் சூழ்ந்த வையகத்துள்
அற்புதம் ஆம் என்றே அறி.” ---நல்வழி.
தண்ணீரானது நிலத்தினது நன்மையினாலும் நல்லோருடைய குணமானது ஈகையினாலும் கண்களுடைய குணமானது நீங்காத அருளினாலும் பெண்களுடைய குணமானது கற்பு நிலை கெடாத வழியினாலும் கடல் சூழ்ந்த பூமியினிடத்து வியக்கத்தக்க மேன்மை உடையனவாகும் என்று நீ அறிவாயாக.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக