வியாழன், 11 மார்ச், 2021

தன்னேரிலாத தமிழ்-252.

 

தன்னேரிலாத தமிழ்-252.

பொய்யான் புலாலொடு கள் போக்கித் தீயன

செய்யான் சிறியார் இனம் சேரான்வையான்

கயல் இயல் உண் கண்ணாய் கருதுங்கால்; என்றும்

அயல அயலவா நூல். ஏலாதி, 14.

கயல் போலும் கண்ணை உடையவளே…!  இயல்பாகவே ஒருவன்,

பொய் கூறான், புலால் உண்ணான், கள் குடியான், தீமைகள் செய்யான், சிற்றினம் சேரான், பிறரை இகழ்ந்து பேசான் என்னும் அருங்குணங்கள் வாய்க்கப்பெற்றானாயின், உண்மையில் அவனுக்கு,  அறிவுநூல்கள் எவையும் வேண்டுவனவல்ல.

 

1 கருத்து: