வியாழன், 15 அக்டோபர், 2015

கலித்தொகை – அரிய செய்தி – 16 - 17

கலித்தொகை – அரிய செய்தி – 16 - 17
சிறந்த சிறுகதை
சுடர்த் தொடீஇ கேளாய் தெருவில் நாம் ஆடும்
…………………………………………………
கடைக் கண்ணால் கொல்வான் போல் நோக்கி நகைக் கூட்டம்
செய்தான் அக்கள்வன் மகன்.
   கபிலர். கலித். 51 

 இப்பாடல் இன்றைய சிறுகதை இலக்கணங்களுக்குப் பொருந்தி அமைவதைக் காணலாம். நடந்த நிகழ்ச்சிகளை ஒரு கதை போலச் சுவைபடக் கூறுகிறாள் தலைவி.
 சுடர்த் தொடீஇ கேளாய்                           எனத் தோழியை விளித்து
 அவன் மேலோர் நாள்                     முன் நிகழ்வுத் தொடக்கம்
 இல்லின்கண்                                  சூழல்
 நீர் கேட்டல்                                               நிகழ்ச்சி
 முன்கை பற்றல்  - அலறியது                   உச்சகட்டம்
மழுப்பியது                                                 வீழ்ச்சி
கடைக் கண்ணால் நோக்கியது                முடிவு        
கலித்தொகை – அரிய செய்தி – 17
இனச் சேர்க்கை – போர்
விறன்மலை வியல் அறை வீழ்பிடி உழையதா
மறம்மிகு வேழம் தன்மாறு கொள் மைந்தினான்
 புகர் நுதல் புண் செய்த புய்கோடு…….
கபிலர். கலித். 53 : 2 - 4
 அகன்ற பாறையிடத்தே வாழும் களிறு தான் விரும்பிய பெண் யானையைத் தன்னிடத்தே கொண்டிருந்தது.  வீரம் மிக்க அந்தக் களிறு தனக்கு மாறாகிய மற்றொரு யானையைத் தனது ஆற்றலால் புள்ளியுடைய அதன் நுதலைக் கொம்பினால் குத்திப் புண்ணாக்கி விரட்டியது.         ( விலங்கினம் தன் இனத்தில் பெண் துணையைத் தக்க வைத்துக் கொள்வதற்குப் போர்புரிந்து தன்  வலிமையைக் காட்டும் – அறிவியல் உண்மை ) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக