புதன், 21 அக்டோபர், 2015

கலித்தொகை – அரிய செய்தி – 28 - 29

கலித்தொகை – அரிய செய்தி – 28 - 29

ஆதி  - சொற்பொருள்
ஆதிக் கொளீஇ அசையினை ஆகுவை           
 மருதன் இளநாகனார். கலித். 96 : 20
ஆதி என்னும் நெடுஞ் செலவினை அதற்குத் தந்து…. ஆதி – ஒருவகை வேகம் என்பர்.
( சூரியன் செலவினையும் இவ்வாறு குறிப்பதுண்டு ஆதி பகவன் – எனத் தொடங்கும் முதல் குறளில் ஆதி பகலன் என்று இருப்பின் பொருள் பொருந்துமா ? ஆய்க.)
கலித்தொகை – அரிய செய்தி – 29

பெருமணம் – (மருதத் திணை)
 மிகநன்று இனி அறிந்தேன் இன்று நீ ஊர்ந்த குதிரை
பெருமணம் பண்ணி அறத்தினில் கொண்ட
 பருமக் குதிரையோ அன்று பெரும ……..
 மருதன் இளநாகனார். கலித். 96 : 32- 34


 மிகவும் நன்று – நீ ஏறிய குதிரையை நான் அறிந்துகொண்டேன் ; அதுதான் அறநூல் கூறிய வழியால் நீ பெருமணம் செய்து கொண்ட  காமக்கிழத்தியாகிய குதிரையும் அன்று – பெருமானே. என்றாள் தலைவி. ( தலைவன் – தலைவியை மணப்பது ஐந்திணைப் பாற்பட்ட மணம். காமக்கிழத்தியையும் தலைவன் மணந்து கொண்டது இப்பாடலுள் இடம் பெற்றுள்ளது. இப்பெருமணம் அறநூல் வழிப்பட்டது என்று கூறுகின்றார். மேலும் காண்க : -  முல்லைத் திணைப் பெருமணம்-114 .)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக