வெள்ளி, 23 அக்டோபர், 2015

கலித்தொகை – அரிய செய்தி – 32 - 33

கலித்தொகை – அரிய செய்தி – 32 - 33
கடல் கொண்ட தென்னாடு
மலிதிரை ஊர்ந்து தன் மண் கடக் வெளவலின்
 பொலிவு இன்றி மேல்சென்று மேவார் நாடு இடம்பட
 புலியொடு வில் நீக்கி புகழ்பொறித்த கிளர் கெண்டை
வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன்
தொல் இசை நட்ட …………………….
 சோழன் நல்லுருத்திரன். கலித்.104 :  1 - 5

 ஒரு காலத்தில் கடல் அலைகள் திரண்டெழுந்து பாண்டிய நாட்டின் மண்ணைக் கைக் கொண்டதால்  - அப்பகுதி மூழ்கிற்று – மனம் தளரா பாண்டிய மன்னன்  - தன் நாட்டை விரிவாக்கும் பொருட்டு – பகைவரைத் தன் வலிமையால் தாழ்க்க வேண்டி அவர் மேல் படை எடுத்தான் – சோழர் சேரர் தம் படைகளை வென்று  - அவர்தம் புலி .வில் கொடிகளை நீக்கித் தன் மீனக் கொடியைக் கைப்பற்றிய பகுதிகளில் நாட்டி – ஆற்றலால் மேம்பட்டு நின்றனன் கெடாத தலைமைப் பண்பினை உடைய தென்னவன் . 24/10/15.
கலித்தொகை – அரிய செய்தி – 33
கொன்றைத் தீங்குழல்
 ஒழுகிய கொன்றைத் தீம் குழல் முரற்சியர்
முல்லை நிலத்து ஆயர் – நீள வளர்ந்த கொன்றைக் காயைக் கொண்டு உருவாக்கிய குழலில் இனிய இசையை இசைத்தனர்.

சோழன் நல்லுருத்திரன். கலித்.106 :  3

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக