சனி, 24 அக்டோபர், 2015

நெய் கடை பால்

நெய் கடை பால்
 நெய்கடை பாலின் பயன் யாதும் இன்றாகி
                                சோழன் நல்லுருத்திரன். கலித்.110 :  17
நெய் கடைந்து எடுத்துவிட்ட பால் போல் யாதும் பயன் இல்லாதாகி விட்டது;
( காய்ச்சப்படாத பாலிலிருந்து வெண்ணெய் எடுத்தல் – உரை உண்மையாமோ …? )
தொய்யில் எழுதுதல்
ஐய பிதிர்ந்த சுணங்கு அணி மென் முலைமேல்
தொய்யில் எழுதுகோ மற்று என்றான் ………
சோழன் நல்லுருத்திரன். கலித்.110 : 16 – 17
 தலைவன் – வியக்கத்தக்க சிதறின தேமல் உடைய மெல்லிய முலைமேல் தொய்யில் எழுதுவேனோ என்றான். ( சங்க காலத்தே மகளிர் மார்பு தோள் முதலிய இடங்களில் சந்தனக் குழம்பு கொண்டு வரிக்கோலம் செய்வர். இதனைத் தொய்யில் எழுதுதல் என்பர்.)


     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக