புதன், 28 அக்டோபர், 2015

கலித்தொகை – அரிய செய்தி – 42 - 43

கலித்தொகை – அரிய செய்தி – 42 - 43
அசுணமா
மறையின் தன் யாழ் கேட்ட மானை அருளாது
அறை கொன்று மற்று அதன் ஆர் உயிர் எஞ்ச
பறை அறைந்தாங்கு …………………
 நல்லந்துவனார். கலித் . 143  : 10 – 12

 வஞ்சனையால் தான் மீட்டிய யாழ் இசையைக் கேட்டு மகிழ்ந்த அசுணமாவை அவ்வின்பத்தைத் துய்க்கவிடாது ( வேட்டையாட )அதன் அரிய உயிர் போகும்படி  பறையை முழக்கினார் போல…. ( இவ்வரிய உயிரினத்தின் இயல்புகளைச் சங்கப் பாடல்களில் காணமுடிகிறது  அரிய வகை அசுணம் விலங்கு / பறவை  - அறிவியல் நோக்கில் ஆராய்ந்து அறிதல் வேண்டும். மேலும் காண்க – பெருங்.47)
 கலித்தொகை – அரிய செய்தி – 43
சான்றோர் அவை
அறன் அறிந்து ஒழுகும் அங்கணாளனைத்
தன் திறன் இலார் எடுத்த தீ மொழி எல்லாம்
நல் அவையுள் படக் கெட்டாங்கு
நல்லந்துவனார். கலித் . 144  : 70 –72
 அறனறிந்து நடக்கும் கண்ணோட்டம் உடையவனை – அத்திறமில்லாதோர்  உண்டாக்கிச் சொன்ன  தீய மொழிகள் எல்லாம் நன்மக்கள் இருக்கின்ற அவைக்குள்ளே ஆராய்ச்சி நிகழ – தீய மொழிகள் எல்லாம் மறைந்து போகும்.  ( நன்று தீது ஆராயும் அவை இருந்தமையும் – அந்த அவை மக்கள் தொடர்புடையவற்றை ஆராய்ந்தமையும் இப்பாடலால் புலனாகின்றன.) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக