வியாழன், 8 அக்டோபர், 2015

கலித்தொகை – அரிய செய்தி – 2 -3

கலித்தொகை – அரிய செய்தி – 2 -3
பிரிவுத் துயர்
இன் உயிர் தருதலும் ஆற்றுமோ
 முன்னிய தேயத்து முயன்று செய் பொருளே.
  பாலை பாடிய பெருங்கடுங்கோ . கலித். 7 : 20 - 21

  தலைவ ! நீ பொருள் ஈட்ட முயன்று ;  கருதிச் செல்லும் தேயத்து நீ ஈட்டும் பொருள் இன்பம் தருமேயன்றி ; இழந்த இவள் இனிய உயிரை மீட்டுத் தருமோ? ( நின் பிரிவால் தலைவி இறந்துவடுவாள் என்றாள் தோழி)
 கலித்தொகை – அரிய செய்தி – 3
காதல் – அறம்
 இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின்
 சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்
அறம் தலைப் பிரியா ஆறும் மற்ற துவே.
    பாலை பாடிய பெருங்கடுங்கோ . கலித். 9 :  21 – 24
 தலைவனும் தலைவியும் உடன்போக்கில் சென்றனர் – செவிலி தேடிச் சென்றாள் – வழியில் எதிரே வந்த  அறவோரைகண்டு வினவியதற்கு – அறவோர் “ மிக உயர்ந்த கற்புடைய நும் மகள்; சிறந்த கணவனை வழிபட்டு அவன் பின்னே சென்றாள்   ‘; வருந்தாதீர் -  இல்லறமே அறங்களில் தலயாய அறம் ; அவ்வற வழியே அவர்கள் சென்றதனால் நலமுடன் வாழ்வர். ” என்றனர்.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக