ஞாயிறு, 22 மே, 2016

பட்டினப்பாலை – அரிய செய்தி – 11

பட்டினப்பாலை – அரிய செய்தி – 11
சொற்போர் மண்டபம்
பல்கேள்வித் துறை போகிய
தொல் ஆணை நல் ஆசிரியர்
உறழ் குறித்து எடுத்த உருகெழு கொடியும்
         கடியலூர் உருத்திரங் கண்ணனார், பட்டினப்.169 – 171
பலவாறு கேட்டறிந்தும், பலநூல்களை முழுமையாகக் கற்றறிந்தும் பெரிய ஆணையை உடைய நல்லாசிரியர்கள், பிறரிடம் சொற்போர் நிகழ்த்துவதற்கு நாட்டி வைத்த கொடிகள் பலருக்கும் அச்சத்தைத் தருவன.
ஒப்பு நோக்கு:
நல் வேள்வித் துறை போகிய
தொல் ஆணை நல் ஆசிரியர்
புணர் கூட்டுண்ட புகழ் சால் சிறப்பின் – (மதுரைக் காஞ்சி) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக