செவ்வாய், 17 மே, 2016

பட்டினப்பாலை – அரிய செய்தி – 6

பட்டினப்பாலை – அரிய செய்தி – 6
நீராடல்
 தீது நீங்க கடல் ஆடியும்
மாசு போக புனல் படிந்தும்
                               கடியலூர் உருத்திரங் கண்ணனார், பட்டினப்.   99 – 100
               பரதவர், தங்கள் தீவினைகள் நீங்குவதற்காகக் காவிரி கடலொடு கலக்கும் இடத்தில் நீராடுவர்.கடல் நீரில் குளித்தமையால் உடலில் படிந்த உப்பு  நீங்குவதற்காக நன்னீரில் நீராடுவர்.
தீவினை நீங்கக் கடலாடுதல் இன்றும் வழக்கில் உள்ளமை நோக்குக. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக