வெள்ளி, 13 மே, 2016

பட்டினப்பாலை – அரிய செய்தி – 3

பட்டினப்பாலை – அரிய செய்தி – 3
கல் – புறா உணவு
பூதம் காக்கும் புகல் அருங் கடிநகர்
தூது உண் அம் புறவொடு துச்சில் சேக்கும்
முது மரத்த முரண் களரி
   கடியலூர் உருத்திரங் கண்ணனார், பட்டினப். 57 – 59

பூதங்கள் காக்கின்ற, ஒருவரும் புக முடியாத காவலையுடைய காளி கோட்டத்தின்கண் கல்லை உணவாக உண்டு வாழும் அழகிய புறாக்களுடன் குடியிருப்பாகத் தங்கும். இத்தகைய இளமரக்காவினையுடையது புகார் நகரம்.
( கடிநகர் – அச்சம் தரும் காளி கோயில் ; தூது உண் அம் புறவு – கல்லைத் தின்னும் அழகிய புறா ; துச்சில் – குடியிருப்பு.) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக