திங்கள், 16 மே, 2016

பட்டினப்பாலை – அரிய செய்தி – 5

பட்டினப்பாலை – அரிய செய்தி – 5
பரதவர் வழிபாடு – உவா நாள்
சினைச் சுறவின் கோடு நட்டு
மனைச் சேர்த்திய வல் அணங்கினான்
மடல் தாழை மலர் மலைந்தும்
புன்தலை இரும் பரதவர்
பைந்தழை மா மகளிரொடு
பாய் இரும் பனிக்கடல் வேட்டம் செல்லாது
 உவவு மடிந்து உண்டு ஆடியும்
                            கடியலூர் உருத்திரங் கண்ணனார், பட்டினப். 87 – 93
                    சிவந்த தலைமயிரினையுடைய பெரிய பரதவர்கள், உவா நாளில் பரந்த, கரிய, குளிர்ந்த கடலில் மீன் பிடிக்கச் செல்வதில்லை, அவர்கள், அந்நாளில் தங்கள் தொழிலில் தோன்றும் ஊக்கம் தவிர்ந்து காணப்படுவர். அவர்கள், பசுமையான தழையாடை உடுத்திய கரிய, தம் மனைவியருடன் கூடியிருப்பர்.
                  பரதவர், சினைகளை உடைய சுறாமீனின் கொம்பை நட்டு, அதில் வலிய தெய்வத்தை நிறுத்தி வழிபடுவர்.
                     அவ்வழிபாட்டின் பொரிட்டு, விழுதுகளைக் கொண்ட தாழையின் அடிப்பகுதியில் வளர்ந்துள்ள, வெண்கூதாளியின் குளிர்ந்த பூக்களால் ஆகிய மாலையை அணிவர், மடலையுடைய தாழையின் மலரைச் சூடுவர், சருக்கரை உடைய பனைமரத்தினின்றும் எடுக்கப்பட்ட கள்ளைனை உண்பர், நெல்லால் ஆக்கப்படும் கள்ளினையும் உண்டு விளையாடுவர்.
( பரதவர். சுறா மீன்களால் தங்களுக்கு  எவ்வகை இடையூறும் நேராமல் அத் தெய்வம் காக்கும் என நம்பினர்.)
( உவவு – உவா நாள். மதி நிறை நாள் ; காழ் – காம்பு .) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக