செவ்வாய், 12 ஜூலை, 2016

பழந்தமிழ்ப் புலவர்கள் – அறிவியல் அறிவாற்றல் – 17
கருத்தோன்றும் காலம்
பூப்பின் புறப்பாடு ஈர் ஆறு நாளும்
நீத்து அகன்று உறையார் என்மனார் புலவர்
                                               தொல்.பொரு. 4: 1,2
தலைவிக்கு மாதவிலக்குத் தோன்றிய ( மூன்று நாள் கழிந்த பின்) பன்னிரண்டு நாளும் தலைவன் அவளைவிட்டுப் பிரிந்திருத்தல் இல்லை என்று கூறுவர் புலவர் – இதனால் பயன் என்னையெனின் அது கருத் தோன்றும் காலம் என்க, என்பார் இளம்பூரணர்.
இஃது இன்றைய மருத்துவ அறிவியலோடு ஒத்திருத்தலை உய்த்துணரலாம். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே  உடலியல் குறித்த ஆய்வில்  தொல்காப்பியரின் அறிவியல் அறிவை எண்ணி இன்புறுக.
அறிவியல் நோக்கு
For women with regular cycles between 26-32 days it is much easier to simply know that you can get pregnant as early as day 8 of your cycle and as late as day 19 of your cycle and on all the days in between. If you have intercourse often during this time, you have an extremely high probability of getting pregnant. Many women using this family planning method find that as they become more familiar with their cycles, they begin to notice fertility signs such as secretions or light cramping which may help them pinpoint ovulation.  
                                                                                                                   Cycle Technologies
                                                                                               5335 Wisconsin Ave., Suite 440
                                                                                              Washington, DC 20015
                      தொல்காப்பியர் கூறியவாறு கருத்தோன்றுங்காலமாவது 4 ஆம் நாள்முதல் 12 நாட்கள், ,இக்கணக்கின்படி 15 நாட்கள ஆகின்றன. மருத்துவ அறிவியலின்படி 8 முதல் 19 ஆம் நாள்வரை கருத்தோன்றும் காலமாகும், இக்கணக்கின்படி 12 நாட்கள் ஆகின்றன.. மூவாயிரம்        ஆண்டுகளுக்கு முன்னர் வரையறுத்த காலஅளவு இன்றும் பொருந்திவருகிறது கால அளவில் இடம்பெற்றுள்ள சிறு வேறுபாடுகூட உடலியல் வளர்ச்சி மாற்றமாகலாம்.
தொல்தமிழர் அறிவியல் அறிவாற்றலை மதிப்பிடுவதற்கு, பழந்தமிழ் நூல்களில் அரிய அறிவியல் செய்திகள் நிறைந்துகிடக்கின்றன. பல்துறை அறிஞர்களோடு பழந்தமிழ் நூல்களை ஆராயப்புகின், அறிவியல் வரலாற்றில் தமிழ்ச் சான்றோர்களுக்குச் சிறப்பான இடம் உண்டு என்பதை எவரும் மறுக்க முடியாது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக