செவ்வாய், 26 ஜூலை, 2016

திருக்குறள் – சிறப்புரை : 308

திருக்குறள் – சிறப்புரை : 308
சினமும் குணமும்
இணரெரி தோய்தலன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று. – 308
பல சுடர்களை உடைய பெரும் நெருப்பு, தன்னைத்
தழுவித் தீய்த்தலை ஒத்த துன்பத்தை ஒருவன் செய்யினும் அவனிடத்து இயன்றவரை சினம் கொள்ளாமல் இருப்பது நல்லது.
சினம் என்னும் நெருப்பில் மூழ்காது – குணம் என்னும் குளத்தில் மூழ்கு. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக