ஞாயிறு, 30 அக்டோபர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 371


திருக்குறள் – சிறப்புரை : 371
ஊழ்
ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி. – 371
பொருள் ஆகும் காலத்துத் தோன்றும்  சோர்வின்மை ; கைப்பொருள் அழியும் காலத்துத் தோன்றும் சோம்பல்.
நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்
செல்வமன்று தம் செய்வினைப் பயனே
                 மிளைகிழான் நல்வேட்டனார், நற். 210 : 5, 6

பலரால் பாராட்டப்படுதலும் விரைந்து செல்லும் குதிரை, தேர் முதலியவற்றை ஏறிச் செலுத்துதலும் செல்வம் அன்று முன் செய்த நல்வினைப் பயனே.

1 கருத்து: