செவ்வாய், 6 ஜூன், 2017

திருக்குறள் – சிறப்புரை :559

திருக்குறள் – சிறப்புரை :559
முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல். ---- ௫௫
நீதிநெறிமுறையின்படி ஆட்சி செய்யத் தவறிய மன்னவன் நாட்டில் பருவமழையும் பெய்யாமல்  போகும்.
“ மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும்
இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும்
காவலர்ப் பழிக்கும் இக்கண் அகல் ஞாலம். – புறநானூறு.

மழை பெய்யாவிட்டாலும் விளைவு இல்லாவிட்டாலும் மக்களின் இயற்கைக்கு முரணான செயற்பாடுகளால் சீரழிவுகள் தோன்றினாலும் இவ்வுலகம் அரசரைப் பழித்துரைக்கும்.

1 கருத்து: