ஞாயிறு, 18 ஜூன், 2017

திருக்குறள் – சிறப்புரை :570

திருக்குறள் – சிறப்புரை :570
கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
இல்லை நிலக்குப் பொறை. ---- ௭0
கொடுங்கோலன், கல்வியறிவில்லாத மூடர்களையே தன் சுற்றமாகக் கொள்வான் ; அம்மூடர்கூட்டத்தைத் தவிர நிலத்திற்குச் சுமையாக இருப்பது வேறு ஒன்றுமில்லை.
“ நலனும் இளமையும் நல்குரவின் கீழ்ச்சாம்
குலனும் குடிமையும் கல்லாமைக் கீழ்ச்சாம்.” – நான்மணிக்கடிகை.

அழகும் இளமையும் வறுமையால் கெடும் ; குலத்து உயர்வும் குடிப் பெருமையும் கல்லாமையால் கெடும்.

1 கருத்து: