செவ்வாய், 10 செப்டம்பர், 2019

தொல்தமிழர் அறிவியல் – 79 : 25. ஐந்தறிவில் ஆறறிவு

தொல்தமிழர் அறிவியல் – 79 :  25. ஐந்தறிவில் ஆறறிவு


 யானை ஆறறிவு    (ELEPHANT – SIX SENSES)

“ Killer tusker razes house but rescues baby under debris”
                           
   Purulia: In a region fraught with man-animal conflict and bloodshed, here’s a story that warms the heart. A tusker smashed a house to bits in a village in West Bengal’s Purulia district on Monday night but when it heard a 10-month-old baby crying under the debris, it turned back and carefully removed every last bit of stone, brick and mortar from the infant’s body before heading back to the forest.

It’s all the more surprising because the lone tusker has killed  at least three people in last year, say forest officers. The family in Olgara village was still in awe when  TOI met them on Tuesday. Mother Lalita Mahato said, “ we worship Lord Ganesh (the elephant god) in our village. Still I can’t belive that the tusker saved my daughter after breaking down the door and smashing a wall. We watched amazed as it gently removed the debris that had fallen on her. It is a miracle…………”–Times of India, 12-03-14.
தாழ்பெருந் தடக்கை தலைஇய கானத்து
வீழ்பிடி கெடுத்த வெண்கோட்டு யானை
உண்குளகு மறுத்த உயக்கத் தன்ன
                                    மோசிகீரனார், அகநா.392: 1-3
கானகத்தில் தன்னை விரும்பிவாழும் அன்பிற்குரிய பெண் யானையை இழந்த ஆண் யானை, உண்ணும் தழை உணவை உண்ணாது விட்டமையால், வாட்டமுற்று மெலிந்தமை போன்று….
குழியைத் தூர்த்த யானை
நீடுகுழி யகப்பட்ட
பீடுடைய வெறுழ் முன்பிற்
கோடு முற்றிய கொல்களிறு
நிலைகலங்கக் குழி கொன்று
கிளைபுகலத் தலைக் கூடியாங்கு
   குறுங்கோழியூர் கிழார், புறநா. 17 : 15 – 19
                    ஆழத்தால் நெடிய குழியின்கண்ணே  அகப்பட்ட பெருமையை யுடைத்தாகிய  மிக்க வலியையுடைய கொம்பு முதிர்ந்த கொல்லுங் களிறு அதன் நிலை சரியக் குழியைத் தூர்த்துத் தன்னினம் விரும்பத் தன்னினத்திலே சென்று பொருந்தினாற் போல்…….
                           ஆறறிவு படைத்த ஒரு மனிதன் செய்யும் வேலையை  யாரும் ஏவாமலே தன் இனத்தைக் காப்பாற்ற நெடிய குழியில் தன் கொம்பால் மண்ணைப் பெயர்த்துக் குழியைத் தூர்த்துக் குழியில் அகப்பட்ட யானையைக் காப்பாற்றிய யானையின் அறிவுத்திறம் ஆறறிவு கொண்டதன்றோ..!
மருத்துவரைத் தேடிவந்த யானை
                            ”ஜிம்பாப்வே நாட்டில் வேட்டைக்காரர்களிடம் இருந்து குண்டு காயத்துடன் தப்பிய யானை உதவிக்காக மனிதர்களை நாடியுள்ளது.
                               ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில் யானைகள் அவற்றின் தந்தங்களுக்காக வேட்டையாடும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.
                           இந்நிலையில் யானை ஒன்று புமி மலைப்பகுதியில் உள்ள விடுதிக்கு குண்டு பாய்ந்த நிலையில் வந்து அங்குள்ள மனிதர்களிடம் உதவி வேண்டுவதுபோல பரிதாபமாக நின்றுள்ளது.
                               யானை உயிருக்கு ஆபத்தான நிலையில் உதவி கோருவதை விடுதியின் மேலாளர் நிக் உணர்ந்தார் தமது பகுதியில் உள்ள மருத்துவக் குழுவினர் விடுமுறையில் சென்றுவிட்டதால் 200 மைல் தொலைவில் உள்ள மருத்துவக் குழுவுக்கு அவர் தகவல் கொடுத்தார்.
                          அவர்கள் அந்த இடத்தை வந்தடைய சுமார் 6 மணி நேரம் ஆகிவிட்டது. ஆனால் அதுவரை பொறுமையாக அமைதியுடன் காத்திருந்தது அந்த யானை.
                              அந்த யானைக்குத் தீவிர சிகிச்சை அளித்த மருத்துவக் குழு அதன் முதுகுப்பகுதியில் ஆழமாகப் பாய்ந்திருந்த குண்டை அகற்றினர். தற்போது உடல்நிலை தேறிவரும் அந்த யானையை கால்நடை மருத்துவர்கள் தொடர்ந்து அக்கறையுடன் கவனித்து வருகின்றனர்.”   
                                                                                                                  தினத்தந்தி- இளைஞர்மலர்: 18/6/16.----------தொடரும்......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக