புதன், 5 டிசம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1067


திருக்குறள் -சிறப்புரை :1067

இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
கரப்பார் இரவன்மின் என்று.---- ௧0௬௭

இரப்பாரை எல்லாம் யான் இரந்து கேட்டுக்கொள்கிறேன், தம்மிடம் இருப்பதை மறைத்து இரந்தவர்க்கு ஒன்றும் கொடுத்துதவ மனமில்லாதவரிடம் சென்று இரந்து நிற்க வேண்டாம்.

“ முற்றிய திருவின் மூவர் ஆயினும்
பெட்பின்று ஈதல் யாம் வேண்டலமே.” ---புறநானூறு. 

நிறைந்த செல்வத்தை உடைய மூவேந்தராயினும் எம்மிடத்து அன்பு காட்டாது வழங்கும் பரிசிலை விரும்ப மாட்டோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக