வியாழன், 27 டிசம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1088


திருக்குறள் -சிறப்புரை :1088

ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு.---- ௧0௮ ௮
(ஒள் நுதல் ; ஓஒ  ; உட்கும் என்)

போர்க்களத்தில்  நேரில் எதிர்க்கத் துணியாது அச்சப்பட்டவர்களும் அஞ்சி ஒடுங்க, என்னுடைய பெருமை மிகுந்த வலிமையெல்லாம் இப்பெண்ணின் ஒளி பொருந்திய நெற்றியின் அழகு ஒன்றினாலே அழிந்துவிட்டதே.

“கடுந்தேர் இளையரொடு நீக்கி நின்ற
நெடுந்தகை நீர்மையை அன்றி நீயும்
தொழுதகு மெய்யை அழிவு முந்துறுத்துப்
பன்னாள் வந்து பணிமொழி பயிற்றலின்
குவளை உண்கண் கலுழ நின் மாட்டு
இவளும் பெரும் பேதுற்றனள்…..” ----அகநானூறு.

விரைந்து செல்லும் தேரினை ஏவலாளருடன் தொலைவில் நிறுத்தி, இங்கு வந்து நிற்கும் பெருந் தன்மையாகிய இனிய குணம் உடையை ஆகின்றாய், அதுவேயன்றி, பிறர் வணங்கத்தக்க தோற்றத்தினையும் உடைய நீயும் மனம் நொந்து பல நாளும் வந்து, பணிந்த மொழிகளைப் பலகாலும் கூறலின் , இவளும் கருங்குவளை மலர் போன்ற மையுண்ட கண்கள் கலங்க, நின்னிடத்துப் பெரிய மயக்கத்தினை எய்தியுளாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக